சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது
சென்னை, ஜூலை 20 - சிபிஎஸ்இ பள்ளிப் பாட புத்தகத்திலிருந்து தந்தை பெரியார் சிந்தனைகள் என்ற பகுதியை மத்தியஅரசு நீக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்க ளன்று (ஜுலை 20) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியி யல் பணிகள் கழகம் (டிபிஐ) முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘ஊர்கூடி வாசிக்கும் இயக்கமாக’ நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள் பகுதியை ஒவ்வொருவராக வாசிக்க, கூடியிருந்தவர்கள் திருப்பி வாசித்தனர். அப்போது பேசிய கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “இலக்கியமும், வரலாறும் பண்பட்ட மனிதனை உருவாக்கும்.
இவற்றின் மீது சங்பரிவாரத்திற்கு தீராத பகை உள்ளது. சமத்துவ சமுதாயத்தை அமைக்க போராடிக் கொண்டிருக்கையில், ஆண்டான் அடிமை சமூகத்தை மீண்டும் கொண்டு வர சங்பரிவாரங்கள் முயற்சிக்கின்றன” என்றார். “அம்பேத்கர் கற்பி என்று கூறியது வரலாற்றை கற்பி என்ற பொருளில்தான் கூறினார். ‘சதி’ கொடுமைக்கு ஆதரவாக பாஜக-வை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே போராடிக் கொண்டிருக்கி றார். இவற்றையெல்லாம் எதிர்த்துதான் இன்றைய நிலைக்கு வந்துள்ளோம்” என்றும் அவர் கூறினார். “தமிழக சிபிஎஸ்இ பாடப் புத்தகத்திலிருந்து இட ஒதுக்கீடு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை களான கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம், வெளியுறவுக் கொள்கை, எல்லை போராட்ட வரலாறு, பெரியார் சிந்த னைகள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றை நீக்கியுள்ளனர். இவற்றிற்கெதிராக தெருக்கள்தோறும் போராட்டத்தை தொடர்வோம்” என்றும் அவர் கூறி னார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், தனலட்சுமி, சர்வேசன், தாமு உள்ளிட்டோர் பேசினர்.