tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் போன்றவை அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

;