tamilnadu

img

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 124 பேராக அதிகரிப்பு

சென்னை, மார்ச் 31- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண் ணிக்கை 67 பேரில் இருந்து 124 பேராக அதி கரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று மேலும் 7 பேரும்,தில்லி மாநாடு சென்று திரும்பிய 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 124 பேராக அதிகரித்துள்ளது. 

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய 43 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தில்லி சென்று திரும்பிய 50 பேருக்கும், விழுப்புரத்திலும் 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

;