tamilnadu

img

தொடரும் எலெக்ட்ரிக் பைக் தீ விபத்து

ஒசூர் எலெக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
காற்று மாசு பாடு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பற்றி விபத்து ஏற்படுவது அதிகரித்து வருவதோடு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வருவது குறித்து விவாதிப்பதற்காக, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. அப்போது புதிய எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஒசூர் அருகே சாலையில் ஓகினோவா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பற்றி எரிந்தது. மின்சார பேட்டரியில்  இருந்து புகை வந்ததும்  பைக்கை ஓட்டிய இளைஞர் உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு தள்ளி நின்றதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதையடுத்து பேட்டரியில் பற்றிய  தீ மளமளவென பரவியதில் ஸ்கூட்டர் முழுவதுமாக சேதமடைந்தது.