திருச்சிராப்பள்ளி, டிச.19- உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் ஊராட்சியில் உள்ளாட்சி பதவிகளுக்கு மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 14 லட்சம், ஊராட்சி தலைவர் ரங்கராஜ் ரூ. 10 லட்சமும், துணை தலைவர் பதவிக்கு ரூ.3 லட்சமும் தந்து ஏலம் விடப்பட்டது குறித்து வெளிவந்த தகவலையடுத்து தேர்தல் அலுவலரும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவருமான ராஜேந்திரன் சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சிறுகனூர் காவல்நிலை யத்தில் மணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், ரங்கராஜ், ஆனந்த் ஆகிய மூவர் மீதும் 240/19, 153/3, 171/பி பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.