திருநெல்வேலி, ஜூன் 11- காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக நெல்லை மாவட்டத்தில் 3000 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிறன்று மாலை முதல் இந்த மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து இரவு முதல் திங்களன்று நாள் முழுவதும் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்கிழமையன்றும் மாவட்டங் களில் ஆங்காங்கே மழை பெய்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் கடல் கொந்த ளிப்பாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. அறிவிப்பின் காரணமாகவும் கன மழை காரணமாகவும் நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், பஞ்சல், கூடுதாழை, கூட்டபுலி, கிராமங்களை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரை யோரத்தில் கட்டப்பட்டிருந்தன.