tamilnadu

img

‘கருந்துளை’யை கூட பார்த்து விட்டோம் ‘அச்சே தின்’தான் தெரியவே இல்லை.. அகிலேஷ் கிண்டல்

லக்னோ, ஏப்.13-2014-இல் மோடியின் பிரபலமான முழக்கங்களில் ஒன்று, ‘அச்சே தின் ஆ ரஹேஹை’ ஆகும். அதாவது நல்லநாட்கள் வரப்போகின்றன என்பதாகும். தான் பிரதமரானால் மக்களின் வாழ்க்கைசுபிட்சமாகும் என்பதைத் தான் மோடி இவ்வாறு கூறியிருந்தார். பாஜக-வினரும் எங்கு பார்த்தாலும் ‘அச்சேதின்’ முழக்கத்தை விளம்பரப்படுத்தினர். மக்களும் அதை நம்பி அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், ஏற்கெனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து மக்கள் தற் போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.இந்நிலையில், மோடியின்‘அச்சே தின்’ முழக்கம் பற்றி,சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.பூமியிலிருந்து 5 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்அண்டவெளியில், இருக்கும்கருந்துளைகளை (க்ஷடயஉமாடிடந), புகைப்படம் எடுத்து அவற்றை நாசா விஞ்ஞானிகள் அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், அந்த புகைப்படத்தை தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள அகிலேஷ், அந்த படத் தில் அருகில், “கருந்துளை கூட நம் கண்களுக்குத் தெரியத் தொடங்கி விட்டது; ஆனால் ‘நல்ல நாள்’ (அச்சேதின்) மட்டும் இன்னமும் தெரியவில்லை” என்று கூறி, பிரதமர் மோடியின் பிரச்சாரத்தைக் கிண்டலடித்துள் ளார்.

;