tamilnadu

img

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை டைல்ஸ்களில் தமிழக அரசு சின்னம்

உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை சுவர்களில், தமிழக அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புலன்ஷர் பகுதியில் உள்ள இச்சாவாரி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமீபத்தில் கழிவறைகள் கட்டப்பட்டது. 
இந்த கழிவறைகளின் சுவர்களில் தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் புதிய கழிவறைகளின் வீடியோ பரவிய நிலையில், இது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து, அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்ததில், 13 கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவை அகற்றப்பட்டன. 

இதை அடுத்து, அப்பகுதி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் கிராம பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி தேவியின் கிராம நிதி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.