tamilnadu

img

பள்ளியில் அலமாரி விழுந்ததில் 2 ம் வகுப்பு மாணவி பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியில் அலமாரி விழுந்த விபத்தில் 2ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் சலாவுதின் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் செவ்வாயன்று வகுப்பு முடிந்ததும், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை எடுக்க ஒரு ஆசிரியர் பாயலை அனுப்பியுள்ளார். மாணவி  பாயல் மர அலமாரியைத் திறக்க முயன்றபோது, அலமாரி அவள் மீது விழுந்தது. இதில் சம்பவ  இடத்திலேயே பாயல் பரிதாபமாக  உயிரிழந்தாள். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இதைத்தொடர்ந்து பள்ளி முதல்வரும் .3 ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.