tamilnadu

img

உத்தரபிரதேச சாலை விபத்தில் சிக்கி 12 பேர் பலி

உத்தரபிரதேச சாலை விபத்தில்சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் இருந்து லக்னோ செல்லும் விரைவு சாலையில்  தில்லியில் இருந்து பீகாரில் உள்ள மோதிஹரி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.  அப்போது  பேருந்து இரவு 10 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்றின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.  31 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் இடாவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.