tamilnadu

img

நான்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும்,அந்த  எம்.எல்.ஏ தான் தனது குழந்தையின் தந்தை என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனைக்கு கோரியிருந்தார்.

அந்தப் பெண் தனது புகாரைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, நேகியின் மனைவி அந்த பெண் மீது மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.

நேகி டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியின் காங்கிரஸின் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், டி.என்.ஏ சோதனை ஒரு சட்ட செயல்முறை மற்றும் சட்டப் விதிமுறைகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். அதற்கு மகேஷ் நேகி தயாராக இருப்பதாக கூறியுள்ளார். காவல்துறையின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும், என கூறியுள்ளார்.

இந்த நிலையில், மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில், பிரணவ் சிங் சாம்பியன் ஒரு வீடியோ வெளிவந்த பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கட்சியின் முதன்மை உறுப்பினர்களிடமிருந்து ஆறு ஆண்டுகளாக வெளியேற்றப்பட்டார்.

நான்கு பேரில், துவாரஹத் எம்.எல்.ஏ மகேஷ் நேகி மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேர் தேஷ்ராஜ் கரன்வால் (ஜாப்ரேராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ), புரான் சிங் ஃபோர்டியல் (லோகாட்), மற்றும் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் (கான்பூர்) ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.