tamilnadu

img

சேலம் சென்னை 8 வழிசாலை திட்டமே குழப்பமான உள்ளது - உச்சநீதிமன்றம்


சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த திட்டம் நாட்டுக்கு முக்கியமானது. எனவே நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என  முறையிடப்பட்டது.,
இதைத்தொடர்ந்து  சேலம் சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் எதற்காக என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது மிக மிக அவசியமான திட்டம் என்கிறீர்கள் ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆகிறது என்கிறீர்கள். நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை கேட்டுள்ளனர். 
மேலும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி தர தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்கமாட்டோம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.