சென்னை, செப்.10- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே. தஹில் ரமணியின் இட மாறுதலை கண்டித்து தமி ழகம் முழுவதும் வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டதால் வெறிச்சோடின. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணி ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால், பெரும்பாலான வழக்க றிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதனால், பல வழக்குகளின் விசாரணை வேறு தேதிக்கு தள்ளி வைக் கப்பட்டது. உயர்நீதிமன்ற வளாகத்தில் முழுவதும் வழ க்கமான கூட்டம் இல்லை. மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே பொது மக்களும் வந்திருந்தனர்.
வழக்கறிஞர்கள் சங் கத்தின் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் தலை மையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். அப் போது, தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்த முடி வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதி பதிக்கே நீதி இல்லையா என் றும் கோஷங்கள் எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வழக்கறி ஞர்கள் துவக்கினர்.