17 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கு
உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடி
புதுதில்லி,நவ.5- எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற உச்சநீதி மன்றத்தின் அறிவிப்பால் கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக் கள் கொறடா உத்தரவை மீறிய தால் அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அப் போதைய சபாநாயகர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்கள் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.
சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி 17 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசார ணை முடிந்து தீபாவளி விடு முறைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கு வதாக வழக்கை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஹுப்ளியில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டத் தில் முதல்வர் எடியூரப்பா பேசிய தாக வீடியோ சிடி ஒன்று வெளி யாகியது. அந்த ஆடியோவில்,கட்சி தலைமைக்கு தெரிந்து தான் இந்த 17 எம்எல்ஏக்களின் ஒவ் வொரு நடவடிக்கையும் கண்காணி க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு ஆதரவின்றி அனைவரும் செயல்படுவதாக எடி யூரப்பா அதிருப்தியாக பேசி யிருந்தார். இந்த ஆடியோ வைர லாக பரவி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக கபில்சிபல் முன்னிலையில் உச்சநீதிமன்றத் தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதே ஆடியோ வை மனுவாக தாக்கல் செய்யப் பட்டது.
இந்நிலையில் நீதிபதி ரமணா இந்த ஆடியோ விவகாரத்தை கருத்தில் கொண்டு அதன் பிறகு தான் 17 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வழங்கப் படும் என்று திட்டவட்டமாக தெரி வித்துள்ளார். இதனால் கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.