tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி வழக்கு

சென்னை,டிச.27- நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறி விக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27 மற்றும்  30 ஆம் தேதியும் தேர்தல்  நடத்தப்படும் நிலையில், நகர்ப்புற உள்  ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிக்கப்படா மல் உள்ளது. இந்நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள அவ சர மனுவில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்  முடிவுகள் வெளியிடப்பட்டால், நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் நடத்தப் படும்போது தாக்கத்தை ஏற்படுத்தும் என வும், ஆதலால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடத்தி முடிக்கும் வரையில், இத்தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என உத்தரவிட  கோரியுள்ளார். இந்த மனு 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

;