tamilnadu

img

சிறைக்கு திரும்பிய நளினி

சென்னை, செப்.15- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் வழங்க நளினி கேட்டுக்கொண்டதை அடுத்து நளினிக்கு ஜூலை 25ம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டது. 7 வார கால பரோல் நிறைவடைந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வேலூர் சிறையில் நளினி மீண்டும் அடைக்கப்பட்டார்.