திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை
சென்னை,செப்.8- குஜராத் உயர்நீதிமன்றத்தி லிருந்து மும்பை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி பொறுப்பேற்று, ஓராண்டு பணியாற்றிய நீதிபதி விஜயா தஹில் ரமணி வெறும் 2 நீதிபதிகளை மட்டுமே கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். 75 நீதிபதிகள் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். இது மூன்று முக்கிய பெரிய நீதிமன்றங்களில் ஒன்று. அவரது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற கொலி ஜியத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் மறுபரி சீலனை கிடையாது என்று மறுத்துவிட்ட னர். உடனடியாக தனது சுயமரியாதையைக் காப்பாற்றி நீதிபதி அம்மையார் தனது பதவி விலகல் கடிதத்தைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். இவரது சுயமரியாதையை நாம் வெகுவாகப் பாராட்டு கிறோம்; துணிச்சலான முடிவும்கூட! நீதிபதிகளை மற்ற மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதால் ஏற்படும் தொல்லை யும், வழக்கு விசாரணை சிக்கலும் ஏராளம் ஏற்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதியே திருத்தப்படவேண்டும். முன்பு, மிகத் திறமையும், நேர்மையும் வாய்ந்த நீதிபதி எம்.எம்.இஸ்மாயிலை பிற மாநிலத்திற்கு மாற்றியதை எதிர்த்து, ‘‘எனக்கு சுயமரியாதை இருக்கிறது; நான் அப்படி பதவி ஏற்கத் தேவையில்லை’’ என்று பதவியை ராஜினாமா செய்த முன்மாதிரி வரலாறும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. தலைமை நீதிபதி அம்மையாரின் சுயமரியாதை மற்றவர்களுக்கு நல்ல பாடமாக அமையவேண்டும் என்று திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கையில் தெரிவித்து ள்ளார்.