tamilnadu

img

ஆணவக்கொலை: அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை, ஜூலை 29 - தமிழகத்தில் ஆணவக் கொலை களை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்  பான தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு  தாமாக முன் வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஆணவக் கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்  பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உத்தரவிட்டது.

இந்த வழக்கு திங்களன்று (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்கு களை விசாரிக்க தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும்  ஆயிரத்து 300 காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களி லும் சிறப்பு பிரிவு அமைப்பது சாத்திய மில்லாதது என கருத்து தெரிவித்தனர். ஆணவக் கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளி யிடப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி  தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க காவல்துறை உதவித் தலைவர் (உதவி ஐஜி) தன்னுடைய உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அறிக்கையை தாக்கல் செய்த  உதவி ஐஜி, செவ்வாயன்று (ஜூலை 30)  நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.