tamilnadu

img

கிராமமக்களிடம் கருத்து கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப். 13- கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சரணாலயங்களைச் சுற்றியுள்ள சூழல் உணர்திறன் மண்டலத்தின் தூரத்தை குறைப்பது தொடர்பாக சுற்றியுள்ள 17 கிராம மக்களிடம் தனித்தனியே கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த  சதீஷ் உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கின் மனுவில் கூறியிருப்ப தாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்வேறு அரிய வகை உயிரினங்களும், தாவர இனங் களும் உள்ளன.  மேற்கு தொடர்ச்சி  மலை காரணமாகவே பெரும்பா லான பகுதிகளில் மழை பெய்கிறது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல சரணாலயங்கள் அமைக்கப் பட்டு, அவற்றை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவு சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி யின் தலைமை காப்பாளர், பாது காக்கப்பட்ட வனங்களில் அமைந் துள்ள சரணாலயங்களில் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூழல் உணர்திறன் மண்டலத்தை மூன்று கிலோ மீட்டர் அளவாக குறைக்க திட்டமிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி யுள்ள திற்பரப்பு, தும்பக்கோடு, அனந்தபுரம், மருங்கூர் உள்ளிட்ட 17 கிராம மக்களிடம் பொது கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் இது தொடர்பான அறி விப்பு கடந்த 4ஆம் தேதி செய்தித் தாள் உள்ளிட்ட எந்த ஊடகங்களி லும் முறைப்படி வெளியிடப்படாமல், பெயரளவில் வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறை யாக நடத்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, முறையான கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தவும், அதுவரை சரணாலயங் களில் சுற்றியுள்ள சூழல் உணர் திறன் மண்டலத்தின் தூரத்தை குறைப்பது தொடர்பான நடவடிக்கை  நிறுத்தி வைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங் கடேஷ் அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்,” நேற்றைய தினம், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட தாகவும், அதில் சுமார் 500 பேர்  கலந்து கொண்டதாகவும், பெரும்பா லானோர்  எதிர்ப்புத் தெரிவித்ததால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிப்படி ஒவ்வொரு கிராமத்திலும் தனித் தனியே கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.