tamilnadu

img

நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி

நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி  மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பான நீட் மற்றும் ஜேஇஇ  தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கி கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் படி நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.ஜேஇஇ தேர்வுகள்  செப்டம்பர் 1 முதல் 6ம்தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம் ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள்  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. மனுவில் கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் வாழ்வதற்குரிய உரிமையை உச்சநீதிமன்றம் பாதுகாக்க தவறி விட்டது. தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கலை புறக்கணித்து விட்டது என சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷன், பி.ஆர் கவாய் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் சூழல் உள்ளது.