உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை,மே 14- தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதிக் குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற் கான பணிகள் நிறைவடையும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் 43 நாட்கள் ஊரடங்கிற்குப் பின்னர் மே 7 அன்று மதுக்கடைகள் திறக்கப் பட்டன. இதற்கு பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வை விசாரித்த உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடஉத்தரவிட்டது.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதி கள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்த வழக்கின் விசாரணை வியாழனன்று நடைபெற்றது. இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஸ்குமார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆன் லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தர விட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
மதுபானம் விற்பனை செய்வதற்கு ஆதார் விவரங்களைக் கேட்பது என்பது தனிநபர் உரிமையை மீறிய செயல் எனவும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே இரவில் அதனை மேற்கொள்ள முடி யாது. டெபிட் கார்டு, யுபிஐ போன்ற ஆப்களின் மூலம் மின்னணு பரிவர்த்தனைக் காக வங்கிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 5338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக பணம் பெறும் வசதி (POS) உள்ளது. இந்த கருவிகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறை வடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.