tamilnadu

img

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11-ல் பதவியேற்பு

சென்னை, நவ. 9- சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சஹி வருகிற 11ஆம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிர மாணம் செய்து வைக்கிறார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  தஹில் ரமணி ராஜினாமா செய்ததை  அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி ஏ.பி சஹியை நியமித்து குடி யரசு தலைவர் உத்தரவிட்டார். இதன்படி, சென்னை உயர்நீதி மன்றத்தின் 49ஆவது தலைமை நீதி பதியாகவும், சுதந்திர இந்தியாவின்  30ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏ.பி சஹி வரும் 11ஆம் தேதி பதவி  ஏற்றுக் கொள்கிறார். திங்கட்கிழமை  காலை 9:20 மணிக்கு ஆளுநர் மாளி கையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ.பி சஹிக்கு, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

;