tamilnadu

img

கிராமசபைக் கூட்டம் நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை:
கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட கோரியவழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார் தாக்கல் செய்த மனுவில், “இந்த ஆண்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கிராம சபைக் கூட்டம்நடைபெறுவது கட்டாயம். இந்தக் கூட்டங்களில் பல்வேறுவளர்ச்சி பணிகள் சார்ந்த  தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.கொரோனா பரவலையும், சமூக இடைவெளியையும் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் கடைபிடிக்க மாட்டார்கள் எனக்கூறி ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டுமென  கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.