tamilnadu

img

பாய்ச்சல் வேகத்தில் வியட்நாம் - கணேஷ்

உலகைச் சுற்றி

சாதாரண மக்கள் கைகளில் பணப்புழக்கம்

சாதாரண மக்களின் கைகளில் பணப்புழக்கம் இருப்பதை வியட்நாம் அரசு உத்தரவாதப்படுத்தி வருகிறது. மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இதனால் ஏற்றுமதியில் சறுக்கல் இருந்தாலும், உள்நாட்டின் தேவை தொடர்வதால் உற்பத்தித்துறையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படவில்லை. “அதிகாரப்பூர்வமாக கணிக்கப்பட்ட வளர்ச்சியை விட அதிகமாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நடப்பாண்டில் இருக்கும்” என்று உறுதியாகக் கூறியுள்ளார் நாட்டின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான குயென் பு டிராங்.

உலகம் முழுவதும் உள்ள நெருக்கடிதான்.. இந்தியா மட்டும் எப்படி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று ஆளும் பாஜகவுக்கு நெருக்கமான வர்கள் கூறுகிறார்கள். பல நாடுக ளின் பொருளாதார சரிவுக்கான புள்ளி விபரங்களை அள்ளித் தெளிக்கி றார்கள். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சீனாவில் கூட பொருளா தாரம் சரிந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்தியாவில் ஏற் பட்டுள்ள 3 புள்ளி சரிவையும், சீனாவில் ஏற்பட்டுள்ள 0.3 புள்ளி சரிவையும் ஒரே தட்டில் வைத்துக் காட்டுகிறார் கள். அதுவும் அமெரிக்காவுடன் ஏற் பட்டுள்ள வர்த்தகச் சண்டைதான் கார ணம் என்பதையும் சொல்வதில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தப் பாதிப்புகள் எதிலும் சிக்கிக் கொள்ளா மல் தனது பொருளாதாரத்தை வியட்நாம் வலுப்படுத்திக் கொண்டுள் ளது. உலகமே நெருக்கடியில் சிக்கித்  தவிக்கிறது என்று நிபுணர்கள் சப்பைக் கட்டு கட்டும் வேளையில்தான் 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுக ளில் 7 சதவிகித வளர்ச்சியை வியட்நா மின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டி சாதனை படைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடு கையில் இரண்டு மடங்குக்கும் மேலான வளர்ச்சியை வியட்நாம் அடைந்தி ருக்கிறது. இத்தனைக்கும் விவசா யத்துறையில் சிறிய பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருந்தது என்கிறார் வியட்நாம் புள்ளியியல் துறையின் தலைவர் குயென் பிச் லாம்.

உற்பத்தித்துறை பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்திருக்கிறது. நடப் பாண்டின் ஒன்பது மாதங்களில் 11.37 சதவிகித வளர்ச்சி இந்தத் துறை யில் ஏற்பட்டுள்ளது. 2 கோடி வேலை வாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குவோம் என்று சொல்லி விட்டு, அதைக் கிடப்பில் போட்ட நமது மோடி அரசைப் போன்று வியட்நாம் அரசு இல்லை. விலைவாசி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றித் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகள் உரு வாக்குதல், தொழில்நுட்ப வளர்ச்சி, விலைவாசி கட்டுக்குள் இருத்தல் என்பதையெல்லாம் அரசின் பிரதான நடவடிக்கைகளாக மாற்றியிருக்கி றார்கள்.

வளர்ச்சி தொடரும்

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிக்கு திட்டமிட்ட அந்நிய முதலீடு ஏற்பு, நல்ல கட்டமைப்பு வசதிகள் மற்றும் வலுவான தொழில் வசதிகள் ஆகிய வையே காரணம் என்று பெரும்பா லான நிதி ஆலோசனை அமைப்புகள் கூறுகின்றன. இந்த வளர்ச்சி நடப்பா ண்டில் மட்டுமல்ல, வரும் ஆண்டுகளி லும் தொடரும் என்பது அந்த அமைப்புகளின் கருத்தாக உள்ளது.  அண்மையில், ஸ்டேண்டர்டு-சார்ட்டர்டு வங்கி ஒரு வர்த்தகக் குறி யீட்டு அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆறாவது இடத்தை வியட்நாம் பிடித்திருந்தது. தெற்கு ஆசிய நாடு களைப் பொறுத்தவரை, வியட்நா முக்குதான் முதலிடம் கிடைத்திருக்கி றது. ஏற்கனவே முன்னிலையில் இருந்த இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. வர்த்தக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள் ளதற்கு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பே காரணம் என்று பட்டியலைத் தயாரித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவு இருக்கையில் வியட்நாம் எப்படி அதிலிருந்து தப்பித்தது; அதுமட்டு மின்றி, எப்போதும் இல்லாத வளர்ச்சி யை எட்டியது என்ற கேள்வி பலரிட மிருந்து எழுந்து வருகிறது.  இது குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் வியட்நாம் கிளை  வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றால் வியட்நாமின் ஏற்றுமதி யும் பாதிக்கப்பட்டது. ஆனால் அதை யும் மீறி பொருளாதாரம் ஆரோக்கிய மாக இருக்கிறது. அதற்கு உள்நாட்டில் தேவையை அதிகப்படுத்தியதே காரணம்” என்று கூறப்பட்டுள்ளது.