வாஷிங்டன், ஜூன் 22- அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் ஈரான் மொத்த மாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டியுள்ளார். வெளிப்படையான பேச்சுவார்த்தை க்கு அமெரிக்கா தயாராக இருப்ப தாகவும், ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்க ஈரானை ஒருபோதும் அனு மதிக்க முடியாது என்றும் வெள்ளிக் கிழமை அன்று ஒஐ தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர் கூறியுள்ளார். தனது நாட்டின் ஆளில்லா விமா னத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டிய அமெரிக்க டிரம்ப், அதற்கு பதி லடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடி யாக தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டது பற்றியும் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்தப்பட்டால் 150 ஈரானி யர்கள் கொல்லப்படலாம் என்று தனக்கு கூறப்பட்டதால் அந்த முடிவை கைவிட்ட தாக டிரம்ப் கூறினார். ஈரானை தாக்க ஏற்கனவே அப்போது விமானங்கள் அனுப்பப்பட்டன என்ற செய்தியையும் அவர் மறுத்தார். ஈரான் தலைவர்களை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், “நீங்கள் அணுஆயு தங்களை வைத்திருக்க முடியாது. இது குறித்து பேச வேண்டுமானால் பேசலாம். இல்லையென்றால் வரும் காலங்களில் நீங்கள் மோசமான பொருளாதார நிலை யில் வாழ வேண்டியிருக்கும்” என்று மிரட்டினார். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா சர்வதேச விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அந் நாட்டு அதிகாரி ஒருவர் எச்சரித்துள் ளார்.”ஈரானின் பிராந்திய விதிகளை மீறி னால், நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வோம்” என்று அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் செயித் சஜத் பொர் கூறினார்.ஈரான் அரசாங்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு டிரம்ப் நிர்வா கத்தின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.