கடந்த ஏழு நாட்களாக, இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு அமெரிக்காவையும் பிரேசிலையும் விட அதிகமாக உள்ளன, அமெரிக்கா, பிரேசில் தொற்றுநோய்களின் அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளாகும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது. .
நோய்த்தொற்றைப் பொறுத்தவரையில் மூன்றாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடான இந்தியாவும் 23% க்கும் அதிகமான கொரோனா பதிப்பு, ஆகஸ்ட் 4-10 க்கு இடையில் உலகளவில் பதிவான இறப்புகளில் 15% க்கும் அதிகமானவையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 10 வரை ஏழு நாட்களில் இந்தியாவில் 4,11,379 கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6,251 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் பாதிப்பு மற்றும் இறப்புகள் இரண்டிலும் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 3,69,575 நோய்த்தொற்று மற்றும் 7,232 இறப்புகள் பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பிரேசில் 3,04,535 பாதிப்பு மற்றும் 6,914 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.