கூகுளுக்கு ஃபிட்பிட் நிறுவனம் நிபந்தனை
கலிபோர்னியா, நவ.2- வாடிக்கையாளர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை விளம்பரத்திற்கு பயன் படுத்தக்கூடாது என்று கூகுளுக்கு ஃபிட்பிட் நிறு வனம் கண்டிப்பான நிபந்தனை விதித்துள் ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிட்பிட் (fitbit) நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உடலின் இயக்கங்களைக் கண்காணிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிட்பிட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்மார்ட் கைக்கடி காரத்தை அறிமுகம் செய்தது. உடல்நிலை மற்றும் ஃபிட்னஸ்ஸைக் கண்காணிக்கும் ஃபிட்பிட் நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
தற்போது இந்த நிறுவனத்தை 14 ஆயி ரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 பில்லியன் டாலர்கள்) கூகுள் விலைக்கு வாங்கியுள்ள தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ளது. அதே நேரத்தில் ஃபிட்பிட் நிறுவனம், தங்க ளிடமுள்ள வாடிக்கையாளர்களின் உடல்நிலை தொடர்பான விவரங்களை விளம்ப ரங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. இதனையேற்று ஃபிட்பிட் நிறுவன வாடிக்கை யாளர்களின் விவரங்கள் எதுவும் பயன் படுத்தப்படாது என்று கூகுள் தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் விவரங்கள் எதையும் பயன்படுத்த இயலாத பட்சத்தில் கூகுள், எதற்காக ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்கியுள்ளது என்ற கேள்வி பல தரப்பி லும் எழுந்துள்ளது. மிகச் சிறந்த ஹார்ட்வேர் அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஃபிட்பிட்டால் ஆப்பிள் நிறுவனத்தைப் போன்ற சிறப்பான சேவையை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க முடியவில்லை. அதற்கு ஏற்ற சாப்ட்வேர் அவர்களிடம் இல்லை. அதே போன்று சிறந்த சாப்ட்வேரைக் கொண்டி ருந்தாலும் அதனைச் சரிவர பயன்படுத்தும் படியான ஹார்ட்வேர் கூகுளிடம் இல்லை. பிற போட்டி நிறுவனங்களை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூகுள், ஃபிட்பிட்டை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஃபாசில் (Fossil) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை, கூகுள் நிறுவனம் 282 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.