ஈரோடு, செப்.16- சத்தியமங்கலம் குளித்தலை பகுதியில் கால்நடைகளை பராமரிப்பதற்கு கால்நடை மருத்துவமனை வசதி ஏற் படுத்திடக்கோரி அப்பகுதி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, செண்பக புதூர் ஊராட்சி, குளித்தலை பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. செண்பகபுதூர் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பவர்கள் உள்ளனர். இந் நிலையில் இவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை யும், இனப்பெருக்க ஊசி போட ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. சிகிச்சைக்காக சத்தியமங்கலம் உக்கரம் பகுதிக்கு செல்ல வேண் டியுள்ளது. ஆகவே, செண்பகபுதூர் கிராமத்தில் ஒரு கால் நடை மருத்துவமனை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கால்நடை வளர்க்கும் விவசாயிகள் சார்பில் எஸ்.சி.நடராஜ் தலைமையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்துள்ளனர்.