அந்தியூர், ஜூன் 16 - அனைத்து ஒன்றிய வார்டு களிலும் சமமான வளர்ச்சிப் பணி களை நிறைவேற்றக்கோரி திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 15 வது மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதி அனைத்து வார்டுகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப் படாமல் திமுக மற்றும் மார்க் சிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கொண்ட 7- வார்டுகளுக்கு தலா ரூ. 3 லட்சம் மட்டுமே வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, ஆளும் கட்சியினர் பாரபட்சத் துடன் நடந்து கொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் எதிர்கட்சி கவுன்சிலர்கள் பல முறை மனு அளித்தும் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்காத தால் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர் கள் ஒன்றியக்குழு அலுவலகத்தில் திங்களன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செவ்வாயன்று மன்ற கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் ஈரோடு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைப் படி அனைத்து ஒன்றிய வார்டு களிலும் சமமாக பணிகளை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அனைத்து கவுன் சிலர்களையும் பணிகளைத் தேர்வு செய்ய வலியுறுத்தியதாகவும், பின்னர் ஆய்வு செய்து பணிகளை நிறைவேற்றலாம் என்றும் கூறிய நிலையில், ஒன்றியக்குழுத் தலை வர் நிதி ஒதுக்கீடு செய்ய இசைவு தெரிவித்ததாகவும் கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேலும், இதில் ஏதேனும் குறை பாடு இருப்பின் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கவுன் சிலர்கள் கொண்டு செல்லலாம் என்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்ட தால் தங்கள் வார்டுகளுக்குச் சென்று ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வளர்ச்சி பணிகளை தேர்வு செய்து ஊராட்சி ஒன்றியத் தில் முன்மொழிவு பட்டியல் கொடுக்க இருப்பதாக போராட் டத்தில் ஈடுபட்ட ஏழு கவுன்சிலர் களும் தெரிவித்தனர்.