ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி, 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.