சத்தியமங்கலம், டிச.14- சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண் ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் குறித்த 2 நாள் கணக்கெ டுப்பு பணி சனியன்று துவங்கியது. தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குள் மற்றும் பல்வேறு வகையான பற வைகள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. வண்ணத்துப் பூச்சிகளின் வகைகளை அறிந்துகொள்ளும் விதமாக கடந்த ஆண்டு முதல் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது. 2 வது ஆண்டாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனியன்று தொடங்கியது. முன்னதாக, வியாழனன்று பண்ணாரியில் நடை பெற்ற கணக்கெடுப்பு பயிற்சியில் சத்தியமங்கலம், பவானி சாகர், டி.என்.பாளையம், கடம்பூர், தலமலை, விளா முண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சர கங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வெள்ளியன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அதிநவீன புகைப்படக் கருவி களை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்ச ரகங்களில் 20 குழுக்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.இதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவை கள் கணக்கெடுப்பும், 10 மணி முதல் 12 மணி வரை வண்ணத் துப்பூச்சி கணக்கெடுப்பு நடைபெறுகிறது.இந்த கணக் கெடுப்பு பணி முடிந்தபின் சத்தியங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சி மற் றும் பறவையினங்கள் குறித்து விபரங்கள் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.