tamilnadu

img

திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுத்திடுக மலைவாழ் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 8- பழங்குடியின சிறுவனை தனது காலணியை கழட்ட செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் கடம்பூரில் என மலை வாழ்வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பழங்குடியின சிறுவனை தனது செருப்பை கழற்ற செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சீனிவா சன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மலை வாழ் இளைஞர் சங்கத்தின் சார்பில்  கடம்பூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மலைவாழ் வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் மலைக்கமிட்டி  உறுப்பினர் சி.துரைசாமி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில், கிளை  நிர்வாகிகள் ராஜேந் திரன், மலையப்பன், ருக்குமணி, ராஜாமணி  உள் ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.