tamilnadu

img

144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிடுக - இரா.முத்தரசன் வலியுறுத்தல்

கோபி, செப். 20- ஊரடங்கு அனைத்தும் தளர்த் தப்பட்ட நிலையில், 144 தடை உத்த ரவு மட்டும் விலக்கப்படவில்லை. ஆகவே, 144 தடை உத்தரவை உட னடியாக விலக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு மாவட் டம், கோபிசெட்டிபாளையத்தில் சி.எஸ்.சுப்பிரமணியம் நினைவகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் தா.பாண்டியன், மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டி னர். அதைத்தொடர்ந்து இரா.முத்த ரசன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 3 அவ சர சட்டத்தை கைவிடவில்லை எனில், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும். காவிரி யில் மேகதாதுவில் அணைகட்டு வோம் என கர்நாடக அரசு அறி விக்கிறது.

அதற்காக மத்திய அரசி டம் இருந்து அனுமதி பெறுவோம் என பகிங்கரமாக அறிவிப்பது கண் டனத்துக்குரியது. இதேபோல், சமஸ்கிருத மொழி, இந்தி மொழி திணிப்பு என மத்திய அரசும் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக நடந்து வருகிறது. இதனால் நாட் டின் ஒற்றுமை, இறையாண்மை, ஒருமைப்பாடு சீர்குலையும் அபா யம் உள்ளது. இதேபோல் ஜி.எஸ்.டி வரி பணத்தை மத்திய அரசு வழங்கா மல் கடனாக தருகிறோம் என்பதை ஏற்க இயலாது. அந்த பணத்தை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கொரோனா காரணமாக ஊர டங்கு அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், இதுவரை 144 தடை உத்தரவு மட்டும் விலக்கப்பட வில்லை. இதனால் அரசியல் கட்சி கள் செயல்பட முடியவில்லை. ஆனால், தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேர்தலுக் கான பணியை செய்து வருகிறார். அதனால் 144 தடை உத்தரவை உட னடியாக விலக்க வேண்டும். இவ் வாறு இரா.முத்தரசன் தெரிவித் தார்.