இராமநாதபுரம், மே 11- 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிப்பதை கண்டித்தும், ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் இராம நாதபுரம் சிஐடியு அலுவலகம் முன்பு ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அய் யாத்துரை தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.குருவேல், எம்.குமார்(மின்சாரம்) வி.பாஸ்கரன் (போக்குவரத்து) எம்.மலைராஜன் (குடிநீர்) பால்ராஜ்( டாஸ்மாக்) உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.