இராமநாதபுரம், மே 19- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வேந்தோனி ஊராட்சி லீலாவதிநகர் பகுதி யில் உள்ள குருவிக்கார மக்கள், துப்பு ரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 150 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வேந் தோனி ஊராட்சித் தலைவர் குழந்தை ராணி துரைராஜ் ஏற்பாட்டில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட் சிக்குழுத் தலைவர் உ.திசைவீரன், ஒன்றி யச் செயலாளர் ஜெயக்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் தி.இராஜா, இராமசந்திரன், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.