இராமநாதபுரம், மே 21- இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனு மதிக்க வேண்டும். ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்க முன்பு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் டி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம். அய்யாத்துரை, எஸ்ஏ.சந்தானம், வி.பாஸ்கரன், மலைராஜ், மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்டத் தலைவர் சசிவர்ணம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயலாளர் விஜய குமார், சிஐடியு மாவட்டச் செயலா ளர் வீரையா, மாவட்டப் பொருளா ளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் மகேந்திர குமார், மாவட்டப் பொருளாளர் வீரசதானந்தம், சாலைப் போக்கு வரத்து சங்க தலைவர் கே.விஜய குமார், ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் தங்கச் செல்வன், ராஜா, கண்ணன், இருளாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.