திருவெற்றியூர், மே 17 - எண்ணூர் அனல்மின் நிலைய தொழி லாளர்களுக்கு பணப்பயன்களை தாமத மின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்ட மென்று தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். எண்ணூர் அனல்மின் நிலையம் 45 ஆண்டுகளாக செயல்பட்டு 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அலகு களும் நிரந்தரமாக மூடப்பட்டது. அங்கு பணி யாற்றிய 470 ஊழியர்களை வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர். அதேசமயம், தொழிலாளர்களுக்கான சம்ப ளம் மற்ற நிர்வாக பணிகள் எண்ணூர் அனல்மின் நிலையத்திலேயே பராமரித்து நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட 470 தொழி லாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியா ளர்களின் நிர்வாக அலுவல்களை கவனிக்க அலுவலர்கள் இல்லாததால் ஊழியர்களின் பணப்பலன் உள்ளிட்ட அனைத்து பணி களும் தேங்கி கிடக்கின்றன.
2017 செப்டம்பர் மாதம் இறந்த தொழிலாளி எ.ராஜூவுக்கு தற் சமயம் வரை வருங்கால வைப்பு நிதி வழங்காத நிலை உள்ளது. 81 குடியிருப்புகள் (6எப், 12ஜி, 8எப்) காலி யாக உள்ள நிலையில், தொழிலாளர்கள் விண்ணப்பித்தும் வீடுகள் வழங்காமல் உள்ளனர். வீடுகள் பூட்டி வாரியத்திற்கு மாதா மாதம் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்ப்படு கிறது. இத்தகைய பணிகளை கண்காணித்து வந்த மேற்பார்வை பொறியாளர் பதவியை வாரியம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், மின்வாரிய தலைமை அலுவ லத்தில் இருந்து போதிய நிதிவராததால், பணப்பயன்களை பெறமுடியாமல் தொழி லாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கடன் மற்றும் பணப் பயன்களை வழங்கவும், மேற்பார்வை பொறியாளர் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலி யுறுத்தி உள்ளது.