tamilnadu

img

அமெரிக்க ஆதரவுப் படைகள் வெனிசுலாவிற்குள் ஊடுருவ முயற்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, மே 6- அமெரிக்க ஆதரவுப் படைகள் வெனிசுலா விற்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டி ருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கொலம் பியாவிலிருந்து வெனிசுலாவிற்குள் ஊடுருவ ஆயுதந்தாங்கிய அமெரிக்க ஆதரவுப் படைகள் முயற்சிகள் மேற்கொண்டிருப் பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த இரண்டு நாட்களாக, அமெரிக்கா வின் பாதுகாப்புப் படையினரால் பயிற்று விக்கப்பட்ட வெனிசுலாவின் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் உதவியோடு செயல்படும் இரு கூலிப்படை யினர் கொலம்பியாவிலிருந்து வெனிசுலா விற்குள் நுழைவதற்கு முயற்சித்துள்ளனர். எனினும், மிகவும் விழிப்புடனிருந்த வெனி சுலா பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் பேர்வழிகளின் திட்டங்களைத் தகர்த்து விட்டனர். ஊடுருவியவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் ஆவணங்களிலிருந்து, அவர்கள் அமெரிக்க ராணுவத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் என்று தெரிகிறது.  

வெனிசுலாவில் உள்ள, அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ (Juan Guaido), இத்தகைய ஊடுருவல் கயவர்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளித்திடும் தனியார் பாதுகாப்பு நிறு வனத்துடன் வெளிப்படையாகவே ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறார். இப்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எழுந்துள்ள நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆயுதந்தாங்கிய ஊடுருவல்காரர்கள் மூலமாக, நாட்டிற்குள் குழப்பங்களை ஏற் படுத்தி, ஜனநாயகப்பூர்வமாக ஜனாதிபதி  யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை அபகரிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இழி நோக்கம் என்று தோன்றுகிறது.

வெனிசுலாவின் இறையான்மை விவகா ரங்களில்  அமெரிக்கா தலையிடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்று, நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்திடும் வெனிசுலாவின் அரசாங்கத் திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தல்களையும், வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறது.

நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்கா மேற் கொண்டுவரும் முயற்சிகளையும், பொருளா தாரத் தடைகளையும் துணிவுடன் எதிர்கொண்டிருப்பதுடன், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றையும் வெற்றிகர மாக சமாளித்துவரும் வெனிசுலாவின் பொலி வாரியக் குடியரசு மக்களுக்கும், ஜனாதிபதி மதுரோவிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஒருமைப்பாட்டை மீண்டும் தெரி வித்துக் கொள்கிறது.

(ந.நி.)