நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
தென்காசி, நவ.22- தென்காசி புதிய மாவட்டத்தையும் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவி களை வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிட மாக கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன் கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங் களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே. புதூர் ஆகிய 8 தாலுகாக்களுடன் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய மாவட்டத்தின் துவக்க விழா வெள்ளியன்று தென்காசியில் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். முதல்வர் பழனிசாமி, புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாகப் பணி களையும் துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை பய னாளிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாவட்ட மாக தென்காசி மாவட்டம் உதயமாகி உள்ளது. விழாவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், திரு நெல்வேலி ஆட்சியர் ஷில்பா, தென் காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயா ளன், தென்காசி எஸ்,பி. சுகுணாசிங் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ற னர்.