அலங்காநல்லூர்:
ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்த நான்குபேர் தென்னை மரத்தில் மோதியதில் இருவர் பலியாயினர். இருவர் படுகாயமடைந்தனர்,அலங்காநல்லூரை அடுத்துள்ள கொண்டயம்பட்டியைச் சேர்ந்த சித்திரைச் செல்வம் மகன் சசிக்குமார் (22), முருகன் மகன் பாலமுருகன் (22), கணேஷ்ராஜா மகன் நவீன்சங்கர் (22), ஜெயம் மகன் சந்தனக் கருப்பு (19) இவர்கள்நான்குபேரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் கொண்டயம்பட்டியிலிருந்து வாடிப்பட்டிக்கு ஞாயிறு இரவு சென்றுள்ளனர், அய்யன்கவுண்டன்பட்டி அருகே சென்ற போது இரு சக்கர வாகனம் சாலையோரத்திலிருந்த தென்னை மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சசிக்குமார், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், நவீன் சங்கர்,சந்தனக் கருப்பு ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.