tamilnadu

img

இடுவாய் தியாகி இரத்தினசாமி 18 ஆவது நினைவுதினம்

ஏழையென்றும் அடிமையென்றும்  எவனும் இல்லை ஜாதியில்  இழிவுகொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே  மனிதர் யாரும்  ஒருநிகர் சமானமாக வாழ்வமே.,.

 என்றார் மகாகவி பாரதி,.. அவரது வைர வரிகளுக்கு உயிர் கொடுத்த மகத் தான மனிதரே தோழர் இரத்தினசாமி.  1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தன்னை ஒருசேர எதிர்த்து அனைத்து கட்சிகள் சார்பில் போட்டி யிட்ட வேட்பாளரை 791 வாக்கு வித்தியா சத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும், இரத்தினசாமியின் பணியும் வெற்றிக்கு பின்னர் மக்கள் சேவையை இரட்டிப்பாக்கியது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது. ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து மகாகவி பாரதியின் மீது கொண்ட அன்பால் அந்த ஊருக்கு பாரதிபுரம் என பெயரிட்டு மகிழ்ந்தார்.  பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத் துவ வாழ்க்கையை உறுதி செய்தார். தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் உரிமையை பாதுகாத்தார். பாழ் பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை புனரமைத்து பள்ளிக்காக குழு அமைத்து பேணி காத்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார். கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமியின் பணியும் ஓங்கி வளர்வதை பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டி ருந்த  தருணத்தில் ஆதிக்க வெறியர்களின் கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்டு நீண்ட  நெடிய மருத்துவ சிகிச்சைப் போராட்டத் திற்கு பின் உயிர் காப்பற்றப்பட்டு அதன் பின்னரும் ஊராட்சி மன்ற பணிகளை தொடர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக் கள் செல்வாக்கின் காரணமாக இரண்டா வது முறையாக நின்று 1532 வாக்குகள் என இரண்டு மடங்கு  வாக்கு வித்தியாசத் தில் ஒரு சேர எதிர்த்து நின்ற மக்கள் முன் னணியை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்ட அவரை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12ம் தேதி இரவு தோழர் இரத் தினசாமி அவர்களை கொடூரமான முறை யில் கொலை செய்தார்கள். அவரது கழுத் தில் கொன்றதற்கான  8 காரணங்களை கொலைகார கும்பல் எழுதி வைத்துச் சென்றது. அதில் நீ கம்யூனிஸ்டாக இருப் பது, தலித்துகளுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந் தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது, மீண் டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது உள்ளிட்ட 8 காரணங்களை எழுதி வைத்தனர். அவரை கொலை செய்த வர்களுக்கு இப்போதும் புரிந்திருக்கும். மீண்டும் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத் தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட் கள் 1008 வாக்குகள் வித்தியாசத்தில் கே.கணேசன் வெற்றி பெற்றது கம்யூனிஸ்டுகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டியெழுப்ப துவங்கியுள்ளனர். ஆம் தற்போதும் மத்திய அரசு மதத்தின் பெயரால் குடியுரிமை திருத்த சட்டத்தை முன்வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதற்கு எதிரான போராட் டத்தை நடத்தி வருவதில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும் உள்ளடக்கியதே.. 45 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியா வில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் இடப் பெயர்வும், நிரந்தரமற்றத் தன்மையும் வேலைவாய்ப்புகளில் அதிக ரித்துள்ளது. வேலைக்காக இளைஞர்கள் சொந்த கிராமங்களை விட்டு இடம்பெய ரும் நிலை அதிகரித்து வருகிறது. அணி  திரட்டப்பட்ட தொழில்களில் கூட இன்று  ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் இன்றி பணியாற்றுகின்றனர். தொழிற் சங்க உரிமைகள்  மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண் டல்களும் அதிகரித்து வருகின்றன.  முறை சாராத் தொழிலாளர்களை அதிகளவில் திரட்ட வேண்டிய தேவை முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்கும் மகத்தான பணியை முன்பை விட அதிகப்படுத்த வேண்டிய தருணமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உள்ளிட்டு தொழில் நகரங்களில் தொழிலா ளர்களின் வர்க்க உணர்வை வளர்த் தெடுக்க தியாகிகளின் ரத்தங்கள் உரமா கட்டும்.  தொழிலாளி வர்க்கத்தின் நேச  வர்க்கமான விவசாய, விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வதாரங்கள் கேள்விக் குள்ளக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங் களை அதிகரிக்க வேண்டியுள்ளது.  இந்த நிலையில் சமூகத்தின் அடித்தட்டில் இருக் கும் பெண்கள், தலித்துகள் மற்றும் சிறு பான்மையின மக்களின் பிரச்சனைகளுக்கு வர்க்க ஒற்றுமையோடு திரட்டி போராட வேண்டியுள்ளது. அதற்கு தடையாக மத வாதம், சாதியவாதம், இனவாதம், பழமை வாதக் கருத்துக்களும், சித்தாந்தங்களும்  முன்வைக்கப்படுகிறது. இதனை எதிர்த்து போராட்டத்தில் உறுதியாக களம் கண்ட போராளியே தோழர் இரத்தினசாமி ஆவார். உழைக்கும் மக்களின் வாழ்வியல் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை யும், அதற்கு தலைமை தாங்கும் தளகர்த் தாக்களையும் உருவாக்குவதில் தோழர் இரத்தினசாமி போன்ற தியாகிகளின் தியா கங்கள் உரமாகும். ஒரு போதும் வீணா காது.  நெஞ்சில் உரத்தை ஏற்றி சனதான ஆதிக்கத்தை வேரறுக்க, கம்யூனிச கருத் துக்களை ஏந்திட செம்மலர்களாகிய நாங் கள் பறிக்க பறிக்க பூத்துக் கொண்டே இருப்போம்.  செ.முத்துக்கண்ணன்  (மாவட்டச் செயலாளர் சிபிஐ(எம்),  திருப்பூர் மாவட்டக் குழு)