சென்னை,மார்ச் 2- மருத்துவ மாணவர் சேர்க்கை யில் பல்கலைக் கழகத்துக்கு நேரடி தொடர்பு இல்லை என நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல் கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். இப் பல்கலைக் கழகத்தின் 32வது பட்ட மளிப்பு விழா வரும் 5 ஆம் தேதி பல்கலைக் கழக வளாகத்தில் நடை பெறவுள்ளது. இது குறித்து செய்தி யாளர்களை சந்தித்த துணை வேந்தர் சுதா சேஷய்யன், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய எம்.பி.பி.எஸ் தேர்வுகளை தேர்வு மையங்களில் கேமராக்கள் பொருத்தி பல்கலைக்கழகத்தில் இருந்து நேரடியாக கண்கா ணித்ததாக தெரிவித்தார்.