tamilnadu

img

வடமாநிலத்திற்கு நடந்துச் செல்ல முயன்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

கல்பாக்கம், மே 14- கல்பாக்கம் அணுமின் நிலை யத்தில் பணியாற்றும் வட மாநில  தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கா னோர் சொந்த ஊருக்கு நடந்து  செல்ல முயன்ற போது காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்க அணுமின் நிலைய வளாக கட்டுமானப் பணியில் வடமாநி லத்தை சேர்ந்த சுமார் 500 தினக்கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக ஒன்றரை மாத மாக தொழிலாளர் குடியிருப்பில் தங்கி உள்ளனர். இந்நிலையில் புத னன்று (மே 13) நள்ளிரவு சொந்த  ஊருக்கு செல்ல கிழக்கு கடற்கரை  சாலை வழியாக தொழிலாளர்கள் புறப்பட்டு நடக்கத் தொடங்கி யுள்ளனர்.

வெங்கம்பாகத்தில் அமைக்கப் பட்டுள்ள சோதனைச்சாவடியில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம், ஒப்பந்ததாரரிடம் கடந்த பல நாட்களாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கு மாறு வலியுறுத்தினோம். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத  காரணத்தால் நடந்து செல்ல தீர்மா னித்ததாக கூறினர். அனைவரையும் இரண்டு நாட்களில் சொந்த மாநிலங்க ளுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்வ தாக கண்ணன் உறுதி அளித்தார். இதனையடுத்து தொழிலாளர் குடி யிருப்புகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிபிஎம் வலியுறுத்தல்

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக கடந்த 11ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளிக்கப்பட்டது. அதில், செங்கல் பட்டு மாவட்டம் மட்டுமின்றி, திரு பெரும்புதூர் பகுதியிலும் ஆயிரக்  கணக்கில் வெளிமாநிலத் தொழி லாளர்கள் உள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப செங்கல் பட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத  நிலையில், வடமாநிலத் தொழிலா ளர்கள் தங்கள் சொந்த மாநிலத்  திற்கே நடந்து செல்ல முயன்றுள்ள னர். எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வலியுறுத்தி உள்ளார்.