திருக்கழுக்குன்றம், ஆக.12- தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019-க்கு எதி ராக மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் மாவட்டக்குழு சார்பில் மக்களிடம் பெற்ற மனுக்களை ஒப்படைக்கும் பொதுக் கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் பகு திக்குழு உறுப்பினர் அழகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் வா. பிரமிளா, பகுதிச் செயலாளர் குமார், மாவட்டக் குழு உறுப்பி னர் பகத்சிங் தாஸ், நகரச் செய லாளர் டி.கோவிந்தன் உள்ளிட்ட பலர் பேசினர். நிறைவாகக் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் பேசுகையில், “கடந்த இரு பது நாட்களாக மாநிலம் முழுவ தும் இந்த கையெழுத்து இயக் கத்தை நடத்தினோம். இதை அந்தந்த பகுதிகளில் உள்ள அஞ்ச லகங்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்புவோம்.
இதையும் மீறி அமல்படுத்த முயன்றால் தமிழ கத்தில் உள்ள அனைத்து கட்சி களும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்திடுவோம்” என்றார். காஷ்மீர் பிரச்சனையில் மதச் சார்பற்ற முற்போக்கு கட்சிகள் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருமித்த தீர்மானத்தை நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி யுள்ளோம். இந்தியாவில் தமிழ கத்தில் மட்டும் தான் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானத்தை ஏற்படுத்துகின்ற நிலைமை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரையிலும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது உள் ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்க ளவை உறுப்பினர்கள் கொண்ட குழுவை காஷ்மீருக்கு அனுப்பி அங்குள்ள நிலைமைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி னார். தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.