tamilnadu

img

ரேபிடோ வாகனத்தை தடை செய்க: தொழிலாளர்கள்

சென்னை, செப். 16- பயணிகளின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பில்லாத ரேபிடோ இருசக்கர வாகன பயணத்தை தடை செய்யக் கோரி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களின் சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் அருகே திங்களன்று (செப். 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆறுமுக நயினார், வி.குப்புசாமி (தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம்), எஸ்.பாலசுப்பிரமணி யன், எம்.சிவாஜி (ஆட்டோ தொழிலா ளர் சம்மேளனம்), பூபதி (கால் டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு), ஜாகிர் உசேன் (உரிமைக் குரல்), ஏ.எல்.மனோகரன், ஜெயகோபால் (ஆட்டோ தொழிலாளர் சங்கம்), பழனி (தொமுச), எச்.முசானில் பாஷா (சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன்), வெ.கடம்பன் (தொழி லாளர் விடுதலை முன்னணி), கே.முருகன் (எச்.எம்.எஸ்), எம்.ஜி.அழ கேசன் (ஐஎன்டியுசி), கே.குப்பன் (ஏஏடியு), பாலகிருஷ்ணன் (சிஐடியு), சம்பத் (ஏஐடியுசி) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

தன்னிச்சையாக செயல்படும் ஓலா, உபேர், பாஸ்ட் டிராக் கால் டாக்சி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்க ளுக்கும் தொழில் பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ், விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய அரசின் இரண்டாண்டுக்கு ஒருமுறை வாகனங்களுக்கு தகுதிச் சான்று என்பதை தமிழகத்தில் உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்ட த்தில் வலியுறுத்தப்பட்டன.

இறுதியில் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்களை டாக்சியாக பயன்படுத்த துவங்கியுள்ளன. இருசக்கர வாகனங்கள் என்பது தனி நபர் பயன்பாட்டிற்கானது. இவற்றை டாக்சியாக பயன்படுத்தக் கூடாது. ஆனால் இந்நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக டாக்சியாக பயன்படுத்துகிறார்கள். இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

இருசக்கர வாகனத்தை டாக்சி போல் பயன்படுத்தும் போது, பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஏதேனும் விபத்துக்குள்ளானால் அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. கால்டாக்சி, ஆட்டோ போன்ற பொதுப்பயன்பாட்டிற்கான மூன்றாவது நபர் காப்பீடு செய்தி ருக்கிற வாகனங்களில் பயணிப்ப வர்களுக்குத்தான் இழப்பீடு கிடைக்கும். ஆனால் இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாக டாக்சி என்ற பெயரில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த தொழிலை நம்பியிருக்கக் கூடிய ஆட்டோ, கால்டாக்சி தொழிலாள ர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளா வார்கள். எனவே இவற்றிற்கு அரசும், காவல் துறையும் தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர்.