சிஐடியு விசைத்தறி தொழிற்சங்கம் வலியுறுத்தல்
கோவை, ஜுன் 22 – விசைத்தறி தொழிலாளர்கள் காப் பீட்டு திட்டத்தில் பயனடைய வயது வரம்பை 60 ஆக உயர்த்த வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கோவை சிந்தாமணி கோ ஆப்ரேட்டிவ் வளாகத்தில் உள்ள மண்டல ஜவுளி ஆணையர் அலுவல கத்தில் சிஐடியு தமிழ்நாடு விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி.முத்துசாமி, பொதுச்செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான விசைத்தறி தொழிலாளர் கள் உள்ளனர். குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இதில் விசைத்தறி தொழிலில் வார்ப்பிங், சைசிங், வைண்டிங், வீவிங் உள்ளிட்ட அனைத்து தொழிலா ளர்களுக்கும் குழு காப்பீட்டு திட் டத்தை இன்சூரன்ஸ் முறையில் மத்திய ஜவுளித்துறை லைப் இன்சூ ரன்ஸ் கார்ப்ரேசன் ்ஆப் இந்தியா வுடன் இணைந்து செயல்படுத்தி வரு கிறது. விபத்து, இறப்பு ஆகிய வற்றால் பாதிக்கப்படும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் குடும் பங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த இரண்டு வருடங் களாக விசைத்தறி தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு வழங்கப் பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் தங்களின் இன்சூரன்ஸ் திட்டத்தில் 18 வயது முதல் 50 வது வரை இருப்பதை 60 வயது வரை உயர்த்தி அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக வழங்கு வதோடு, தொழிலாளர்களின் குழந் தைகளுக்கான கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித் திருந்தனர்.
முன்னதாக, இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமையில் மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக இயக்குநர் மற் றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோ சனை கூட்டம் காந்திபுரத்தில் உள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிஐடியு விசைத்தறி சங்க சம் மேளன தலைவர் பி.முத்துசாமி, செய லாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை மற்றும் வயது வரம்பு ஆகிய கோரிக்கைகளை தொழிலாளர் தரப் பில் இருந்து பி.ஆர்.நடராஜன் எம்.,பி., வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆலோசனைக்கு பிறகு கல்வி உதவி தொகை கிடைப்பதற்கு மற்றும் வயது வரம்பு குறித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மண்டல ஜவுளித்துறை அதிகாரிகள் உறுதி யளித்தனர்.