சென்னை, நவ. 8- பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளை தளர்த்தக் கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரி யர்களின் விவரங்களை இணையத்தில் பதி வேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளைத் தளர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவ ரங்கள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வி அலுவ லர்கள் மறுப்பதாக புகார் எழுந்த நிலை யில், வழக்குத் தொடர்ந்த அனைத்து ஆசிரி யர்களின் விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.