மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாதவன், வட்டார செயலாளர் அனந்தசேகர் உள்ளிட்டோர் வழங்கினர்.