tamilnadu

img

நாங்குநேரி : அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 மனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி, அக்.1- நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்,  நாம் தமிழர் வேட்பாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல்  திங்கட்கிழமை  பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் திங்களன்று  வேட்புமனு தாக்கல் செய்தனர்.  செவ்வாயன்று நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைதேர்தல் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்,  நாம் தமிழர் வேட்பாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டதாக  தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் பெறப்பட்ட 46 மனுக்களில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும்  மீதி 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

;