புதுக்கோட்டை , மே.3: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாங்காடு கிராமத்துக்கு கரும்பு வெட்டும் பணிக்காக வந்த தொழிலாளர்கள் 43 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆலங்குடி அருகே மாங்காடு கிராமத்திற்கு விழுப்புரத்தில் இருந்து ஒரு லாரியில் ஞாயிற்றுக்கிழமை கரும்பு வெட்டும் பணிக்காக 43 தொழிலாளர்கள் வந்தனர். இவர்களால் கரோனாவால் தொற்று பரவக்கூடும் என அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை கண்காணிக்க வேண்டும் என வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், 43 தொழிலாளர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தெரிவித்தார்.